இலங்கையில் குண்டுவெடிப்பு: ராணுவத்தினர் 12 பேர் உள்பட 19 பேர் காயம்
கொழும்பு: இலங்கையில் ராணுவ வீரர்கள் சென்ற பேருந்தில் குண்டு வெடித்து 19 பேர் காயமடைந்தனர்.இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து தியாதலவாவில் உள்ள ராணுவ முகாமுக்கு பேருந்து ஒன்றில் ராணுவ வீரர்கள் நேற்று அதிகாலை சென்றனர். அப்போது, திடீரென வெடிகுண்டு வெடித்ததில் பேருந்து பலத்த சேதமடைந்தது. அதில் பயணம் செய்த 7 ராணுவ வீரர்கள், 5 விமானப்படை வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 7 பேருக்கு காயம் ஏற்பட்டது. குண்டுவெடிப்பில் பேருந்து பலத்த சேதமடைந்தது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.‘‘இது தீவிரவாத செயலாக இருக்க முடியாது. பேருந்தில் இருந்த வெடிப்ெபாருள் வெடித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விசாரணைக்கு பிறகே குண்டுவெடிப்பிற்கான காரணம் தெரியும். சம்பவம் குறித்து ேபாலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்\' என்று ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.