பஸ்சில் குண்டு வெடிப்பு : இலங்கையில் 19 பேர் காயம்

தினமலர்  தினமலர்

கொழும்பு: இலங்கையில், நேற்று அதிகாலை, பஸ்சில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில், 12 ராணுவ வீரர்கள் உட்பட, 19 பேர் உயிரிழந்தனர். அண்டை நாடான, இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து, ராணுவ தளம் உள்ள தியாதளவா என்ற இடத்தை நோக்கி, பஸ் ஒன்று, நேற்று அதிகாலை சென்றது; அதில், ராணுவம், விமானப்படை வீரர்கள் உட்பட பொதுமக்களும் பயணம் செய்தனர். அப்போது, அந்த பஸ்சில் திடீரென குண்டு வெடித்தது. இதில், ஏழு ராணுவ வீரர்கள், ஐந்து விமானப்படை வீரர்கள் உட்பட, 19 பேர் படுகாயம் அடைந்தனர். இது பயங்கரவாத செயலா அல்லது பஸ்சில் ஏதாவது வெடி பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதா என, விசாரணை நடந்து வருகிறது.

மூலக்கதை