கட்சி தலைவர் பதவியிலிருந்து ஷெரீப் தகுதி நீக்கம்

தினமலர்  தினமலர்
கட்சி தலைவர் பதவியிலிருந்து ஷெரீப் தகுதி நீக்கம்

இஸ்லாமாபாத் : 'அரசியல் சட்டத்தின், 62 மற்றும், 63வது பிரிவின் கீழ், தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர், ஒரு கட்சியின் தலைவராக இருக்க முடியாது' என, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, பாக்,, முன்னாள் பிரதமர், நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமராக இருந்த, நவாஸ் ஷெரீப், 'பனாமா பேப்பர்ஸ்' ஊழலில் சிக்கியதையடுத்து, அவரை பதவி நீக்கம் செய்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றம், ௨௦௧௭ல் உத்தரவிட்டது. எனினும், பாகிஸ்தானை ஆளும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக, நவாஸ் ஷெரீப், தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.

இதை எதிர்த்து, பாக்., உச்ச நீதிமன்றத்தில், அவாமி முஸ்லிம் லீக் உட்பட பல கட்சிகள், மனு தாக்கல் செய்தன. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'அரசியல் சட்டத்தில், 62 மற்றும், 63வது பிரிவின் கீழ், தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர், ஒரு அரசியல் கட்சியின் தலைவராக பதவி வகிக்க கூடாது' என, தீர்ப்பளித்தது.

இயைதடுத்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும், நவாஸ் ஷெரீப் நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை