மாலத்தீவில் அவசர நிலை பிரகடனம் மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு
மாலே: மாலத்தீவில் அவசர நிலை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவின் உள்நாட்டில் அரசியல் குழப்ப நிலை நீடித்துவருகிறது. இதனையடுத்து அந்நாட்டு அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தியது. இந்நிலையில் அந்நாட்டின் பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையை ஏற்று மேலும் 30 நாட்களுக்கு அவரசநிலை பிரகடனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.