இந்தியாவின் 73 சதவீத சொத்து 1 சதவீத மக்களிடம் குவிந்து கிடக்கிறது

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியாவின் 73 சதவீத சொத்து 1 சதவீத மக்களிடம் குவிந்து கிடக்கிறது

டாவோஸ்: இந்திய நாட்டின் 73 சதவீத சொத்துக்கள் மற்றும் வளங்கள், 1 சதவீத மக்களிடம் மட்டுமே உள்ளது. இது மக்களிடையே வருவாய் சமநிலை இல்லாத நிலையை காட்டுவதாக சர்வதேச அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

சர்வதேச அமைப்பான ஆக்ஸ்போம் ஹவர்ஸ், இந்திய மக்களிடையே வருவாய் சமநிலை, சொத்துக்களின் சதவீதம் உள்ளிட்டவைகளை அடிப்படையாக கொண்டு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வறிக்கையின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவின் 73 சதவீத சொத்துக்கள் மற்றும் வளங்கள், 1 சதவீத மக்களிடம் தான் உள்ளது.

இதற்கு வருவாய் சமநிலை இல்லாததே முக்கிய காரணம். கார்மென்ட்ஸ் துறையில் பணியாற்றும் கடைநிலை ஊழியர், அத்துறையின் அதிக சம்பளம் வாங்கும் அதிகாரியை போல் உயர, அவருக்கு 941 ஆண்டுகள் பிடிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் அதில் வெளியாகியுள்ளது.

இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் இதேநிலை தான் உள்ளது.

கடந்தாண்டில், சர்வதேச அளவில் ஈட்டப்பட்ட 82 சதவீத சொத்துக்கள், 1 சதவீத மக்களிடம் சென்று சேர்ந்துள்ளன.

கடந்தாண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, நாட்டின் 1 சதவீத மக்களிடம் 58 சதவீத சொத்துக்கள் மற்றும் வளங்கள் இருந்ததாகவும், அது தற்போது 20. 9 லட்சம் கோடிகள் அதிகரித்து  73 சதவீதமாக உயர்ந்திருப்பதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

.

மூலக்கதை