அமெரிக்காவில் ரயில் விபத்து 3 பேர் பலி, 50 பேர் காயம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் பயணிகள் ரயில் தடம் புரண்ட விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். 50 பேர் காயம் அடைந்தனர்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் சியாட்டில் பகுதியில் இருந்து போர்ட்லேண்டு நோக்கி அம்டிராக் பயணிகள் ரயில் ஒன்று புறப்பட்டது. டகோமா நகருக்கு தெற்கே உள்ள பகுதியில் சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் இருந்து விலகி ரயில் தடம் புரண்டது.
இதில் சில பெட்டிகள் கீழே விழுந்ததில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த 2 லாரிகள் மற்றும் பல்வேறு வாகனங்களும் சேதமடைந்துள்ளன. இந்த விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
50 பேர் காயம் அடைந்துள்ளனர்.
அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரெயிலில் 77 பயணிகளும் மற்றும் 7 ரெயில்வே ஊழியர்களும் இருந்துள்ளனர்.
சரக்கு ரயில் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த பாதை முதன்முறையாக பயணிகள் ரயில் சேவைக்காக பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
.