2025ம் ஆண்டு முதல் பெட்ரோல் வாகன விற்பனையை முற்றிலும் நிறுத்த சீன நிறுவனம் முடிவு

தினகரன்  தினகரன்

பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான பெய்ஜிங் ஆட்டோமோட்டிவ் குழுமம், வரும் 2025ம் ஆண்டு முதல் பெட்ரோல் வாகன விற்பனையை முற்றிலும் நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து பெய்ஜிங் ஆட்டோமோட்டிவ் குழுமத்தின் தலைவர் ஜியூ ஹெய் கூறுகையில், வரும் 2020ம் ஆண்டுக்குள் பெய்ஜிங்கிலிருந்தும், 2025ம் ஆண்டுக்குள் சீனா முழுவதும், பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகன விற்பனையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு சீனாவுக்கு மட்டுமே பொருந்தும். இந்த முடிவால், தென்கொரியாவின் ஹுண்டாய், ஜெர்மனியின் டெய்ம்லர் நிறுவனங்களுடன் பங்குதாரராக இணைந்து வாகனங்களை தயாரிப்பதில் பெய்ஜிங் குழுமத்துக்கு எந்த தடையும் இருக்காது என்று கூறியுள்ளார். சீனாவில் பல நகரங்களில் காற்று மாசு பாடு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனால், அந்நாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் பயன்பாட்டு வாகனங்களின் உற்பத்தியை நிறுத்தப்போவதாக அறிவித்து வருகின்றன. மாறாக அவை மின்சார கார் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.

மூலக்கதை