மெக்சிகோ சிட்டியில் பத்திரிகையாளர் கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
மெக்சிகோ சிட்டியில் பத்திரிகையாளர் கொலை

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ நாட்டின் கான்கன் நகரில் உள்ள குயிண்டானா ரூ என்ற பகுதியில் உள்ள ரிசார்ட்டில் ரூபன் பாட் என்பவர் தங்கியிருந்தார். இவர், அதே பகுதியில் இணைய தள பத்திரிகையை நடத்தி வந்தார்.

இந்நிலையில், ரூபன் பாட் நேற்று ரிசார்ட்டில் தங்கியிருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் தாங்கள் கொண்டு வந்த துப்பாக்கியல் ரூபனை சரமாரியாக சுட்டனர். இதில், ரூபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.



கடந்த ஒரு மாத காலத்தில் பத்திரிகையாளர் மீது நடைபெற்ற இரண்டாவது தாக்குதல் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ரூபன் பாட்டுக்கு கொலை மிரட்டல்கள் வந்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.



.

மூலக்கதை