கொடிய மலைப்பாம்பின் பிடியில் சிக்கி உயிருக்குப் போராடிய நாய்!

தினகரன்  தினகரன்
கொடிய மலைப்பாம்பின் பிடியில் சிக்கி உயிருக்குப் போராடிய நாய்!

பாங்காக்: தாய்லாந்து நாட்டில் மலைப்பாம்பிடம் சிக்கி உயிருக்குப் போராடிய நாயை இரண்டு நபர்கள் அணைந்து காப்பாற்றியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வளைதலங்களில் வெளியாகி உள்ளது. சுமார் 4 நிமிட இந்த வீடியோவில் வீட்டருகே நின்ற வளர்ப்பு நாயை மலைப்பாம்பு ஒன்று சுற்றி வளைத்தது. பின்னர் நாயைச் சுற்றி தன் உடலை வைத்து இறுக்கியதில் மூச்சுத் திணறிய நாய் ஈனஸ்வரத்தில் முனங்கியது. சப்தம் கேட்டு அங்கு வந்த நாயின் உரிமையாளரும், அக்கம்பக்கத்தினரும் நீண்ட குச்சியால் அடித்ததில் நிலைகுலைந்த மலைப்பாம்பு அந்த நாயை விடுவித்து சென்றுவிட்டது. இந்த வீடியோ காட்சி சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது.

மூலக்கதை