வேலையில்லாதோர் உதவித்தொகை நிறுத்தியது பின்லாந்து

தினமலர்  தினமலர்
வேலையில்லாதோர் உதவித்தொகை நிறுத்தியது பின்லாந்து

ஹெல்சின்கி : வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை நிறுத்துவதாக பின்லாந்து அறிவித்துள்ளது.

பின்லாந்தில் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவில், 2015ல் வேலைவாய்ப்பற்றோர் எண்ணிக்கை 10 சதவீதத்தை தொட்டது. இதனால் அவர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் திட்டத்தைஅரசு அறிமுகப்படுத்தியது. வேலைவாய்ப்பற்ற 2000 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, 2017 ஜனவரி முதல் மாத ஊதியமாக, ரூ. 45 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதிக செலவு பிடிக்கும் இத்திட்டம் பயனற்றது என தற்போது விமர்சனம் எழுந்துள்ளது. இதனால் 2019 ஜனவரியுடன், இந்த இரண்டாண்டு திட்டத்தை நிறுத்துவதாக, பின்லாந்து அறிவித்துள்ளது.

மூலக்கதை