வடகொரியாவுக்கு எதிரான ஒலிப்பெருக்கி பிரச்சாரம் நிறுத்தம் : அமைதி பேச்சுவார்த்தையை முன்னிட்டு இந்த நடவடிக்கை

தினகரன்  தினகரன்

சியோல்: வடகொரியாவுக்கு எதிராக எல்லையில் நடத்தி வந்த ஒலிப்பெருக்கி பிரச்சாரத்தை அமைதி பேச்சுவார்த்தையை முன்னிட்டு தென்கொரியா நிறுத்தி உள்ளது. பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக தென்கொரிய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் ஒலிபெருக்கி பிரச்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பேச்சுவார்த்தைக்கு பிறகு மீண்டும் ஒலிப்பெருக்கி பிரச்சாரம் தொடங்கப்படுமா என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. வடகொரியாவின் ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனைகளுக்கு எதிராக தென்கொரியா இருநாட்டு எல்லைகளில் ஒலிப்பெருக்கி பிரச்சாரத்தை தொடங்கியது. இந்த நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு வடகொரியா ஒப்புக்கொண்டது. இதனையடுத்து தென்கொரியா மற்றும் வடகொரிய அதிபர்கள் இடையே ஏப்ரல் 27-ம் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.

மூலக்கதை