பாக்., அதிகாரிகளுக்கு கட்டுப்பாடு

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்: பாக்., தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஏப்.7-ல் அமெரிக்க துாதரக வாகனம் மோதி பைக்கில் சென்ற ஒருவர் பலியானார். இதில் துாதரக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் அறிவித்தது.இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் பெரிதாகி உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் அரசியல் விவகாரத் துறை செயலாளர் தாமஸ் ஷெனான் கூறும்போது, 'அமெரிக்க தூதரக அதிகாரிகளின் நடமாட்டத்துக்கு பாகிஸ்தானில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, வாஷிங்டனிலும் பாகிஸ்தான் துாதரக அதிகாரிகளின் நடமாட்டத்துக்கு அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதிக்கும்'' என்றார்.பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் முகமது பைசல் கூறும்போது, பிரச்னையைத் தீர்த்துக் கொள்ள இருநாடுகளும் பேசி வருகின்றன' என்றார்.

மூலக்கதை