பெண்கள் பாதுகாப்பு : மோடிக்கு சர்வதேச நிதிய தலைவர் வலியுறுத்தல்

தினமலர்  தினமலர்
பெண்கள் பாதுகாப்பு : மோடிக்கு சர்வதேச நிதிய தலைவர் வலியுறுத்தல்

வாஷிங்டன் : பெண்கள் பாதுகாப்பு விசயத்தில் பிரதமர் மோடி அதிக கவனம் செலுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டைன் லெகார்ட் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஆண்டுக் கூட்டத்தில், அதன் மேலாண் இயக்குநர் கிறிஸ்டைன் லெகார்ட் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காஷ்மீர் மாநிலம் கத்வாவில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்தார். கத்வா சிறுமிக்கு நேர்ந்தது மிகவும் அருவருப்பானது எனக் கூறிய அவர், இந்த விவகாரத்தில் இந்திய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை