இலங்கை பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

தமிழ் முரசு  தமிழ் முரசு
இலங்கை பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

கொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
இலங்கையில் ரணில் விக்கிரம சிங்கேவின் (68) ஐக்கிய தேசிய கட்சி சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. சிறிசேனா அதிபராகவும், ரணில் விக்ரமசிங்கே பிரதமராகவும் இருக்கின்றனர்.

பிரதமர் விக்கிரமசிங்கேயின் ஆட்சியில் இலங்கையின் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

அதன் மீதான ஓட்டெடுப்பு இன்று நடைபெறுகிறது.

இந்த தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக ரணிலின் கூட்டணிக் கட்சியான சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி வெளிப்படையாக  அறிவித்தது.   நேற்று இரவு இலங்கை பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கேற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு வந்தது.

பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது. நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக 122 வாக்குகளும் கிடைத்தன.

26 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சியினர் ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.   மகிந்த ராஜபக்சேவின் பொது ஜனபிரமுனா, அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சி ஆகியவை நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

.

மூலக்கதை