அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு மாணவர் பலி, மாணவி உள்பட 3 பேர் படுகாயம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு மாணவர் பலி, மாணவி உள்பட 3 பேர் படுகாயம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்திலுள்ள பள்ளி ஒன்றில் மரம் நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார். மாணவி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

வாஷிங்டனை அடுத்துள்ள பிரதான நகரில் இயங்கி வந்த பள்ளி ஒன்றில்  நேற்று காலை மர்ம நபர் ஒருவர் பள்ளியின் உள்ளே நுழைந்து வகுப்பறையில் அமர்ந்திருந்த  மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலே பலியானார். மேலும் ஒரு மாணவி உள்பட இரண்டு மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

 
துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் அருகிலிருந்த மாணவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடியதால் அந்த பள்ளியிலிருந்த மற்ற மாணவர்களும் ஆசிரியர்களும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பள்ளியை விட்டு வெளியேறி சாலைக்கு ஓடி வந்துள்ளனர்,. சாலையில் அனைவரும் ஓடியதால் அப் பகுதி முழுவதும் களேபரமானது.



அப்பகுதியில் ரோந்துக்கு சென்ற போலீசார் பள்ளி மாணவர்கள் ஓடி வருவதைப் பார்த்து விசாரித்துவிட்டு சம்பவம் நடந்த  பள்ளிக்கு விரைந்து சென்று பள்ளி நிலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியில் குவிந்ததால் பதற்றம் உண்டானது.

துப்பாக்கி சூடு நடத்தியவர் அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில் துப்பாக்கி சூடு நடத்தியவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

மேலும் காயமடைந்த மாணவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

.

மூலக்கதை