லண்டன் கோர்ட்டில் மல்லையா ஆஜர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
லண்டன் கோர்ட்டில் மல்லையா ஆஜர்

லண்டன்: மல்லையாவை நாடு கடத்த மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், லண்டன் நீதிமன்றத்தில் மல்லையா இன்று ஆஜரானார். இந்தியாவில் பல ஆயிரம் கோடி ரூபாயை வங்கியில் கடனாக வாங்கி திரும்ப செலுத்தாமல் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தலைமறைவாக லண்டனில் வசித்து வருகிறார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட வங்கிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

அவரை ஆஜர் படுத்த மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டுமென்று பிரிட்டன் அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.

இந்த வழக்கு லண்டன் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு ஆஜராகுமாறு மல்லையாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதன்படி மல்லையா கோர்ட்டில் ஆஜரானார்.

.

மூலக்கதை