அத்துமீறி நுழைந்த இந்திய ட்ரோன்: சீனா குற்றச்சாட்டு

தினமலர்  தினமலர்
அத்துமீறி நுழைந்த இந்திய ட்ரோன்: சீனா குற்றச்சாட்டு

பெய்ஜிங்: இந்திய ட்ரோன் அத்துமீறி தங்கள் நாட்டு வான்பகுதிகளுக்குள் நுழைந்து, நொறுங்கி விழுந்ததாக சீனா நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து அந்நாட்டு மீடியாவில் ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாக வெளியான செய்தி: இந்தியாவை சேர்ந்த ட்ரோன், அத்துமீறி சீன வான்பகுதிக்குள் நுழைந்து நொறுங்கி விழுந்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கை, சீனாவின் இறையாண்மையை மீறிய செயல். இதற்கு அதிருப்தியும் எதிர்ப்பையும் சீனா தெரிவித்துள்ளது. ட்ரோன் கீழே விழுந்ததையடுத்து, சீன வீரர்கள் அதை எடுத்து எங்கிருந்து வந்தது என கண்டறிந்தனர். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், ட்ரோன் எந்த இடத்தில் விழுந்தது என்பது பற்றியும், எப்போது நடந்தது என்பது குறித்தும் வெளியிடவில்லை.

மூலக்கதை