ஜெர்மனியில் பயங்கரம்: ரயில்கள் நேருக்கு நேர் மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜெர்மனியில் பயங்கரம்: ரயில்கள் நேருக்கு நேர் மோதல்

பெர்லின்: ஜெர்மனியின் தியூசல்டோர்பு என்ற பகுதியில் மீர்பஸ்க் என்ற இடத்தில் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. மீர்பஸ்க் அருகே டி. பி.

கார்கோ என்ற நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியது. இந்த விபத்தில் பெட்டிகள் சேதமடைந்ததில் பயணிகள் ரயிலில் பயணம் செய்த 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.   சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை