ஆப்கானில் தீவிரவாதிகள் தாக்குதல் : 43 ராணுவ வீரர்கள் பலி

தினகரன்  தினகரன்

மைவாந்த்; ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு 43 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டின் ராணுவ மையத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காந்தகார் மாகாணத்தில் உள்ள மைவாந்த் மாவட்டத்தில் உள்ள ராணுவ மையம் மீதே இந்த பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட 2 வாகனங்கள் மூலம் இந்த தீவிரவாத தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த கொடூர தாக்குதல் சம்பவத்திற்கு தலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். கடந்த 1 வாரத்தில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும்

மூலக்கதை