பேச்சு மூலம் தீர்வுக்கு தயார்: சீன அதிபர் உறுதி

தினமலர்  தினமலர்
பேச்சு மூலம் தீர்வுக்கு தயார்: சீன அதிபர் உறுதி

பீஜிங்:'அண்டை நாடுகளுடான பிரச்னைகளுக்கு பேச்சு மூலம் தீர்வு காண, சீன அரசு தயாராக உள்ளது' என, சீன அதிபர், ஜிங்பிங் கூறியுள்ளார்.

சீனத் தலைநகர் பீஜிங்கில், சீன கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் நேற்று பங்கேற்ற, அதிபர், ஜிங்பிங் கூறியதாவது:அண்டை நாடுகளுடன் உள்ள பிரச்னைகளுக்கு பேச்சு மூலம் தீர்வு காண, சீன அரசு தயாராக உள்ளது. அதே சமயம், சீன நலன்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.

பரஸ்பர நலன், உள்ளார்ந்த தன்மை, நட்புறவு, உண்மை ஆகியவற்றின் அடிப்படையில், அண்டை நாடுகளுடன், உறவை பலப்படுத்துவதில், சீனா ஆர்வமாக உள்ளது.பயங்கரவாதத்தை, எல்லா வடிவங்களிலும், சீனா, கடுமையாக எதிர்க்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை