அடுத்த நூற்றாண்டிலும் இந்தியா உடனான உறவு நீடிக்கும்: அமெரிக்கா

தினமலர்  தினமலர்
அடுத்த நூற்றாண்டிலும் இந்தியா உடனான உறவு நீடிக்கும்: அமெரிக்கா

வாஷிங்டன்: அடுத்த நூற்றாண்டிலும் இந்தியா உடனான உறவு நீடிக்கும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறி உள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள். இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் பணி புரிகின்றன. உலகில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தயாவும் அமெரிக்காவும் தோளோடு தோள் நிற்கின்றன. இந்தியா உடனான உறவு அடுத்த நூற்றாண்டிலும் நீடிக்கும் .

கடந்த 10 ஆண்டுகளில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் கணிசமான அளவிற்கு விரிவடைந்துள்ளது. இந்தோ பசிபிக் பகுதிகளில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த இந்தியா உடன் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மூலக்கதை