ஐ.நா., அமைதிப்படையில் இந்தியர்களுக்கு விருது

தினமலர்  தினமலர்

நியூயார்க்; ஆப்ரிக்க நாடான தெற்கு சூடானில், உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரண உதவிகள் வழங்க, ஐ.நா.,வின் அமைதிப்படை அனுப்பப்பட்டுள்ளது; இதில், இந்திய வீரர்கள், ௫௦ பேர், இடம் பெற்றுஉள்ளனர்.
தெற்கு சூடானில், ஜாங்லி பகுதியில், இவர்கள், பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்திய வீரர்கள் சிறப்பாக பணியாற்றியதற்காக, அவர்களுக்கு, ஐ.நா.,விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதை, தெற்கு சூடானுக்கான ஐ.நா., அமைதிப்படையின் தலைவர், கமாஜி வழங்கினார்.

மூலக்கதை