டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு! பொலிஸ் அதிகாரி ஒருவர் பலி

PARIS TAMIL  PARIS TAMIL
டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு! பொலிஸ் அதிகாரி ஒருவர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் தப்பியோடிய மாணவனை தேடும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
 
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் லப்போக் நகரில் டெக்சாஸ் டெக் பல்கலைக்கழகம் அமைந்துள்ளமை குறிப்பிடத்க்கது.
 
பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸ் நிலையமும் காணப்படுவதுடன் குறித்த பொலிஸார் பல்கலைக்கழக மாணவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
 
அவ்வகையில், மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலையடுத்து அவர்களின் அறைகளில் நேற்று மாலை பொலிஸார்சோதனையிட்டுள்ளனர்.
 
அப்போது ஒரு அறையில் போதை மருந்துகள் மற்றும் அவற்றை பயன்படுத்தும் சாதனங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டமையை தொடர்ந்து பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஒரு மாணவனை கைது செய்தனர்.
 
இதன்போது குறித்த மாணவன் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் சம்பவ இடத்திலேயே பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
 
இதனை தொடர்ந்து தப்பிச்சென்ற மாணவனை தேடும் முயற்சியில் அந்நாட்டு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

மூலக்கதை