அமெரிக்க வரலாற்றில் முதல் 100 நாளிலேயே மிக சிறந்த நிர்வாகம்

தினகரன்  தினகரன்

வாஷிங்டன்: ‘‘பதவிக்கு வந்த 100 நாட்களிலேயே அமெரிக்க வரலாற்றில் மிகச் சிறந்த நிர்வாகத்தை வழங்கியுள்ளேன். இது ஆரம்பம்தான்’’ என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பெருமையாக கூறியுள்ளார். அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி 20ம் தேதி பதவியேற்றார். டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் நேற்று 100வது நாளை நிறைவு செய்தது. இதுகுறித்து டொனால்ட் டிரம்ப் தனது வாரந்திர ரேடியோ மற்றும் ஆன்லைன் உரையில் அந்நாட்டு மக்களுக்கு உரையாற்றியதாவது: முதல் 100 நாட்களில் எனது நிர்வாகம் அமெரிக்க வரலாற்றில் மிகச் சிறந்த நிர்வாகத்தை வழங்கியுள்ளதாக நம்புகிறேன். இந்த குறுகிய காலத்தில் எனது அரசாங்கம் வேலை வாய்ப்புகளை மீண்டும் திரும்பி கொண்டு வந்துள்ளது.அமெரிக்கா மிக வேகமாக வளர்ச்சி காணும் என்று உறுதி அளிக்கிறேன். நிறுவனங்களும் நல்ல லாபம் ஈட்டி வருகின்றன. இது வெறும் ஆரம்பம்தான். நடுத்தர வருவாய் பிரிவினர் மற்றும் வர்த்தகர்களுக்கு பெரிய அளவில் வரிச் சலுகை அளிக்கப்படும். அமெரிக்க ெதாழிலாளர்களுக்காக எனது அரசு போராடுகிறது. அமெரிக்க மக்களுக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதலில் அமெரிக்க மக்கள் என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தை எனது அரசு ரத்து செய்தது.வர்த்தக ஒப்பந்தங்கள் மறுஆய்வுஅமெரிக்கா இதுவரை மேற்கொண்டுள்ள உலக வர்த்தக அமைப்புடனான ஒப்பந்தம் உள்பட அனைத்து சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களையும் மறுஆய்வு செய்வது தொடர்பான நிர்வாக உத்தரவில்  அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தங்களில் விதிமீறல்கள் மற்றும் மோசடிகள் நடந்துள்ளதா என்பது ஆய்வு செய்யப்படும். இந்த உத்தரவு பிரச்னை வெளியே கொண்டு வருவதுடன், அதற்கான மாற்று தீர்வையும் வழங்கும் என்று டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.

மூலக்கதை