கென்ய படைகள் தாக்குதல் : 31 பயங்கரவாதிகள் பலி

தினமலர்  தினமலர்

பதாதி: சோமாலியாவில் கென்ய படைகள் நடத்திய தாக்குதலில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் 31 பேர் கொல்லப்பட்டனர்.சோமாலியாவின் பதாதி மாவட்டத்தில் மார்ச் 26ல் கென்ய படைகள் ஹெலிகாப்டர்கள் மற்றும் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் அல் ஷபாப் இயக்கத்தைச் சேர்ந்த 31 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இது குறித்து அல் ஷபாப் அமைப்பு கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.கென்யா மீதான அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பின் தொடர் தாக்குதலால் 2011ல் கென்யா தனது படைகளை சோமாலியாவுக்கு அனுப்பி தாக்குதல் நடத்தி வருவது.கென்யா, சோமாலியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் தொடர்ந்து சதி செயல்களில் ஈடுபட்டு வரும் அல் ஷபாப் அமைப்பு அல் கொய்தா இயக்கத்தின் கிளை அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
7 யூனிசெப் பணியாளர்கள் பலி: ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டு போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திங்கட்கிழமை கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் யூனிசெப் அமைப்பின் உதவி பணியாளர்கள் 7 பேர் பலியாகினர்.

மூலக்கதை