கரும்புகையினால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! பீதிக்குள்ளான பயணிகள்

PARIS TAMIL  PARIS TAMIL
கரும்புகையினால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! பீதிக்குள்ளான பயணிகள்

துபாயிலிருந்து வந்த விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென கரும்புகை கிளம்பியதால் விமானம் அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 
 
துபாயிலிருந்து தனியாருக்கு சொந்தமான விமானம் ஒன்று 177 பயணிகள் உட்பட 184 பேருடன் சென்னைக்கு புறப்பட்டது. 
 
நடுவானில் விமானம் பறந்துக்கொண்டிருந்த போது திடீரென, என்ஜினில் திடீரென கரும்புகை கிளம்பியது. 
 
இதை கவனித்த விமானிகள், சாதூர்யமாக செயல்பட்டு விமானத்தை அவசரமாக தரையிறக்கினர். 
 
தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, விமானத்தில் இருந்த கோளாறுகள் சரிசெய்யப்பட்டது. 
 
 

மூலக்கதை