பாகிஸ்தானில் பயங்கரம் டேங்கர் லாரி வெடித்து 120 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாகிஸ்தானில் பயங்கரம் டேங்கர் லாரி வெடித்து 120 பேர் பலி

லாகூர்: பாகிஸ்தானில் எரிபொருள் ஏற்றி சென்ற டேங்கர் லாரி திடீரென வெடித்து சிதறியதில் 120 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 75 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணம், பகஹல்வால்பூர் பகுதியில் இன்று காலை பெட்ரோலிய எரிபொருள் ஏற்றிய டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது.

டேங்கரில் இருந்து எரிபொருள் வெளியேறியதால் சாலையோரத்தில் லாரியை நிறுத்திவிட்டு பழுதான டேங்கரை டிரைவர் சரிசெய்து கொண்டிருந்தார். எனினும் டேங்கரில் இருந்து எரிபொருள் நிற்காமல் வெளியேறியது.

அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து எரிபொருளை பிடித்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், திடீரென டேங்கர் வெடித்து சிதறியது.

மேலும் லாரி தீப்பிடித்து மளமளவென எரிந்தது. டேங்கர் வெடித்ததில் அங்கிருந்த பலரும் பாதிப்புக்குள்ளாகினர்.

அவ்வழியே சென்ற 6 கார்கள், பைக்குகள் எரிந்தன. மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து தீயணைப்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் சுமார் 120 பேர் உடல் கருகி பலியாகினர். 75க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். டேங்கர் லாரி வெடித்து 120க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.



.

மூலக்கதை