ராஜ சொகுசுக்காக பல நாடுகளை ஏமாற்றிய இத்தாலிக்காரர் கைது

தினமலர்  தினமலர்
ராஜ சொகுசுக்காக பல நாடுகளை ஏமாற்றிய இத்தாலிக்காரர் கைது

மொன்டெனெக்ரோ: மொன்டெனெக்ரோ நாட்டின் அரச குடும்பத்தை சேர்ந்தவர் என்று கூறி சொகுசு அனுபவித்து வந்த இத்தாலி நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
இத்தாலியை சேர்ந்த மவுரிஸ் அன்ட்ரோலி, தன்னை மொன்டெனெக்ரோவின் இளவரசர் என்றும், தங்கள் குடும்பம் அல்பேனியா, செர்பியாவிலும் ஒரு காலத்தில் ஆட்சி செய்தது. மேலும் தங்கள் குடும்பத்தில் யார், யார் ஆட்சி செய்தனர். அதை பற்றி குறிப்புகள், ஓவியங்கள், புகைப்படங்கள், பதக்கங்கள், முத்திரைகள், போர்க் கருவிகள் வைத்திருக்கிறார்.
பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்த இவர், அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லி அதற்குரிய மரியாதை, வசதி, வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆடம்பர விருந்துகளில் கலந்துகொண்டிருக்கிறார்.நடிகை பமீலா ஆண்டர்சன் இவரிடமிருந்து, 'மொன்டெெனக்ரோவின் சிறந்த பெண்மணி' என்ற விருதைப் பெற்றிருக்கிறார்.கடந்த ஆண்டு இத்தாலியில் உள்ள ஆடம்பர விடுதியில் தங்கியிருந்தார். விடுதிக்கான கட்டணத்தை
மொன்டெனெக்ரோ துாதரகத்துக்கு அனுப்பிவிடும்படி சொல்லிவிட்டார். ஆனால் துாதரகம் இப்படி ஓர் இளவரசர் தங்கள் நாட்டில் இல்லை என்றும் கட்டணத்தைச் செலுத்த முடியாது என்றும் தெரிவித்துவிட்டது.இதையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரகசிய விசாரணை தொடங்கியது. இதில் அவர் இத்தாலியைச் சேர்ந்தவர். என்றும் அவர் கூறிய அனைத்து விஷயங்களும் பொய் என்று தெரியவந்தது.போலி ஆவணங்கள், போலி முத்திரைகளைப் பயன்படுத்தி பல நாட்டினரை அவர் ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கும் அரசக் குடும்பத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இவரை இத்தாலி போலீசார் கைது செய்தனர்.

மூலக்கதை