விரைவில் சுற்றுப்பயணம்: ஓ.பி.எஸ்.,- தீபா திட்டம்

தினமலர்  தினமலர்
விரைவில் சுற்றுப்பயணம்: ஓ.பி.எஸ்., தீபா திட்டம்

சசிகலா குடும்ப ஆதிக்கத்திற்கு எதிராக, கட்சியினர் மற்றும் பொதுமக்களை திரட்ட, ஜெ., அண்ணன் மகள் தீபாவுடன் சேர்ந்து, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல முடிவு செய்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். எனினும், தன்னை எதிர்த்த பன்னீர்செல்வம், முதல்வராகி விடக்கூடாது என்பதற்காக, எம்.எல்.ஏ.,க்களை அடைத்து வைத்து, தன் விசுவாசியான இடைப்பாடி பழனிசாமியை, முதல்வராக்கி உள்ளார். அதை தொடர்ந்து, அரசுக்கு எதிராகவும், கட்சியை கைப்பற்றவும், கட்சி தொண்டர்களையும், மக்களையும் திரட்ட, பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார். அவருடன், ஜெ., அண்ணன் மகள் தீபா மற்றும் நிர்வாகிகள் உடன் செல்ல உள்ளனர்.

பயணத் திட்டத்தை வகுக்கும் பணியில், முன்னாள் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்திருப்பது, சசிகலா தரப்பினரிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

- நமது நிருபர் -

மூலக்கதை