பஞ்சாப்பில் கொடூரம் 9 வயது சிறுவனை கடத்தி கொன்று சதையை தின்று, ரத்தம் குடித்த சிறுவன்

தினகரன்  தினகரன்

லுதியானா: பஞ்சாப்பில் 9 வயது சிறுவனை 6 துண்டுகளாக வெட்டி கொன்று ரத்தம் குடித்த 16 வயது சிறுவன் பிடிபட்டான். பஞ்சாப் மாநிலத்தின் லுாதியானா பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களின் மகன்கள் தீபு குமார் (9) மற்றும் தினேஷ் (16, பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த திங்கட்கிழமை காணமால் போன தீபு குமார் அதற்கு அடுத்த நாள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக அருகில் உள்ள பகுதியில் கிடந்துள்ளான்.அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது  தீபு குமாரை   தினேஷ் அழைத்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதனையடுத்து தினேஷை போலீசார் விசாரணை செய்தனர். அப்போது, தீபு குமாரை ஆசைக்காட்டி வெளியே அழைத்து சென்று கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். மேலும், தீபு குமாரின் உடலை 6 துண்டுகளாக வெட்டியதுடன் சதையை சாப்பிட்டதாகவும், ரத்தத்தை குடித்ததாகவும் தெரிவித்தான். பின்பு வெட்டிய துண்டுகளை பிளாஸ்டிக் பையில் போட்டு அருகில் உள்ள பகுதியில் வீசியதாக தினேஷ் தெரிவித்தான். அவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

மூலக்கதை