தேசிய கீதம் பாடுவதில் புதிய உலக சாதனை
ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் காஜிவாட் நகரில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டு தேசிய கீதம் பாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், சுமார் 3.5 லட்சம் பேர் தேசிய கீதம் பாடி புதிய உலக சாதனை படைத்தனர். இதற்கு முன்பு 2014ம் ஆண்டில் வங்கதேச நாட்டவர்கள் ஒரே நேரத்தில் 2.54 லட்சம் பேர் திரண்டு தங்கள் நாட்டு தேசிய கீதத்தை பாடியதே உலக சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை நம் நாட்டவர்கள் முறியடித்துள்ளனர். இதற்கான சான்றிதழை கின்னஸ் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ் அதிகாரிகள் வழங்கினர்.