‘பாகுபலி’க்கு 6 விருதுகள்!
கடந்த சில ஆண்டுகளாக சிறந்த சினிமா கலைஞர்களுக்கு International Indian Film Academy (IIFA) விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. 2015-ன் சிறந்த கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ராஜமௌலியின் ‘பகுபலி’ திரைப்படத்திற்கு 6 விருதுகள் கிடைத்தது. தமிழின் சிறந்த படம், சிறந்த இயக்குனர் (ராஜமௌலி), சிறந்த குணச்சித்திர நடிகர் (சத்யராஜ்), சிறந்த குணச்சித்திர நடிகை (ரம்யாகிருஷ்ணன்), சிறந்த பின்னணிப் பாடகர் (ஹரிச்சரண்), சிறந்த பின்னணிப் பாடகி (கீதா) என ‘பாகுபலி’ 6 விருதுகளை அள்ளியது! தமிழின் சிறந்த நடிகருக்கான விருது ‘தனி ஒருவன்’ படத்தில் நடித்த ‘ஜெயம்’ ரவிக்கு வழங்கப்பட்டது. ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில், அஸ்வின் சரவணன் இயக்கிய ‘மாயா’ படத்தில் சிறப்பாக நடித்த நயன்தாரா சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டார். சிறந்த இசை அமைப்பாளராக அனிருத் (மாரி), சிறந்த நகைச்சுவை நடிகையாக கோவை சரளா (காஞ்சனா-2), சிறந்த வில்லன் நடிகராக அர்விந்த் சாமி (தனி ஒருவன்), சிறந்த பாடலாசிரியராக தனுஷ் (மாரி) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். நேற்று நடந்த இவ்விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், பிரகாஷ் ராஜ், மாதவன், நடிகைகள் தமன்னா, மீனா, ஸ்ரேயா, அபிராமி, இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உட்பட பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
