கௌதம் + ஜெயம் ரவி + அனிருத் : சர்ப்ரைஸ் கூட்டணி!
‘என்னை அறிந்தால்’ படத்தைத் தொடர்ந்து தற்போது சிம்பு, மஞ்சிமா நடிக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் கௌதம் மேனன். இப்படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், தற்போது இரண்டு புதிய படங்களை இயக்குவதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறாராம் கௌதம். இந்த இரண்டு படங்களையுமே எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் மதன் தயாரிக்கவிருக்கிறார். ஏற்கெனவே மதனும், கௌதமும் இணைந்து ‘போட்டோன் கதாஸ்’ நிறுவனம் மூலம் படங்களை தயாரித்துள்ளனர். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் வரை இந்தக் கூட்டணி தொடர்ந்தது. அதன்பிறகு ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோகஷன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தைத் தொடங்கிய மதன், தற்போது தனியாக படங்களை தயாரித்து வருகிறார். தற்போது மீண்டும் மதனும், கௌதமும் இணைந்து கலக்கவிருக்கிறார்கள்.
இரண்டு படங்களில் ஒன்றில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறாராம். இன்னொரு படத்தில் தமிழ் சினிமாவின் முக்கியமான ஹீரோ ஒருவரை இயக்கவிருக்கிறார் கௌதம் மேனன். அந்த ஹீரோ யார் என்ற தகவல் தெரியாவிட்டாலும், ‘இந்த இருவரும் இணைவது இதுவே முதல்முறை’ என்ற கூடுதல் தகவல் மட்டும் நமக்குக் கிடைத்தது. விரைவில் இந்த 2 படங்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரலாம் என்கிறார்கள்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
