இணைய சமநிலை குறித்து திறந்தவெளி கூட்டம் நடத்தி கருத்து கேட்கிறது டிராய்
00:58:05Wednesday2016-01-20
புதுடெல்லி: டெல்லியில் நாளை திறந்த வெளி கூட்டம் நடத்தி இணைய சமநிலை குறித்து கருத்துக்கேட்க உள்ளதாக டிராய் அறிவித்துள்ளது. சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமூக வலைதளங்களை பார்ப்பதற்கு வழக்கமான இணையதள பேக்கேஜ் அல்லாமல் தனியாக கட்டணம் வசூலிக்கின்றன. சில நிறுவனங்கள் வாட்ஸ் அப், பேஸ்புக் பயன்படுத்துவதை இலவச சேவையாக அளிக்கின்றன.
இவை இணைய சமநிலைக்கு எதிரானது என எதிர்ப்பு எழுந்தது. இதுதொடர்பாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரிடம் இருந்தும் கருத்துக்களை கேட்டிருந்தது. குறிப்பிட்ட சில இணைய சேவைகளுக்கு தனி கட்டணம் வசூலிப்பது அல்லது அதிக கட்டணம் வசூலிப்பதும் இணைய சமநிலைக்கு எதிரானது.
இந்த கட்டண வேறுபாடு குறித்து ஆராய வரும் 21ம் தேதி திறந்தவெளி ஆலோசனை கூட்டம் நடத்த டிராய் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து டிராய் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘இணைய சேவைக்கு வேறுபட்ட கட்டணம் வசூலிக்கப்படுவது பற்றி ஆராய திறந்த வெளி ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள பிஎச்டி ஹவுசில் நடக்கிறது.
இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்புவோர் யாரும் கூட்டத்தில் பங்கேற்கலாம். நிறுவனங்கள் தரப்பிலும் பங்கேற்கலாம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய சமநிலை குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என டிராய் கூறியிருந்தது. இந்த சூழ்நிலையில் திறந்த வெளி கூட்டம் நடத்தி கருத்துக்கேட்பதால் சில வாரங்களில் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
