மூச்சுத்திணறல் காரணமாக 40 அகதிகள் மரணம்! இத்தாலி கடற்படை தகவல்

NEWSONEWS  NEWSONEWS
மூச்சுத்திணறல் காரணமாக 40 அகதிகள் மரணம்! இத்தாலி கடற்படை தகவல்

பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கடத்தல்காரர்கள் மூலம் சட்டவிரோதமாக மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளில் குடியேறி வருவது அதிகரித்து வருகிறது.

இவ்வாறு அகதிகளாக வருபவர்கள் சில நேரங்களில் ஏற்படும் கப்பல் விபத்தின் மூலம் உயிரிழக்கின்றனர்.

இந்நிலையில், சுமார் 400 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த படகு லிபியாவில் இருந்து 21 மைல்கள் தொலைவில் மத்திய தரைக்கடல் பகுதியில் தத்தளிப்பதாக இத்தாலி கடற்படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடற்படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

படகில் வந்தவர்களில் சுமார் 40 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது. மேலும், மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கையை உறுதிப்படுத்தப்படவில்லை.

மூலக்கதை