கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் கைது
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அழகுமுத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 42), தொழிலாளி. இவருக்கு நம்பிலா என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். இவரது சொந்த ஊர் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளம் ஆகும். கடந்த 2 ஆண்டுகளாக இசக்கிமுத்து ஆழ்வார்திருநகரியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த பகுதியில் அவர் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் முத்து(21) அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் இசக்கிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த முத்துவை நேற்று பிடித்தனர். அவர் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். அவர் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், "இசக்கிமுத்துவிடம் ஒரு அவசர உதவிக்காக ரூ.10 ஆயிரம் வாங்கி இருந்தேன். அதை அவர் திரும்ப கேட்டுவந்தார். அவரிடம் வாங்கிய பணத்தை நான் தராமல் இருந்தேன். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆழ்வார்திருநகரி பஜார் பகுதியில் நின்று கொண்டிருந்த என்னிடம் பொதுமக்கள் முன்னிலையில் கொடுத்த பணத்தை மீண்டும் அவர் திரும்ப கேட்டார். இதில் எங்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து நான் சென்று விட்டேன். இதனால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்து வந்தேன். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற நான் அவரை சரமாரியாக வெட்டி கொைல செய்து விட்டு தப்பி ஓடிவிட்டேன். போலீசார் என்னை பிடித்து விட்டனர்" என்று தெரிவித்துள்ளார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
