கேம்பியா: அகதிகளை ஏற்றி சென்ற படகு விபத்தில் சிக்கி 7 பேர் பலி; பலர் மாயம்
பஞ்சுல், மேற்கு ஆப்பிரிக்காவின் சில நாடுகள், கேம்பியா மற்றும் செனகல் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகள் ஒவ்வோர் ஆண்டும், வேலை தேடியும், சிறந்த வாழ்க்கைக்காகவும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, கடல் வழியே சட்டவிரோத வகையில் படகுகளில் புலம்பெயர்ந்து செல்வது வழக்கம். அப்போது, இயற்கை பேரிடர்கள், பலத்த காற்று மற்றும் கடல் அலைகளால் சிக்கி பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில், 200-க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றி கொண்டு படகு ஒன்று கடலில் சென்றுள்ளது. அப்போது அது திடீரென விபத்தில் சிக்கியது. இதில், 7 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. 10 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. 96 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பலரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் மணல்திட்டு ஒன்றின் அருகே, விபத்தில் சிக்கி கவிழ்ந்த படகு கண்டறியப்பட்டது. படகில் சென்றவர்கள் ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களாக இருக்க கூடும் என நம்பப்படுகிறது.




மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? - தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் விளக்கம்
தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது: செல்வப்பெருந்தகை
அநீதி ஆட்சியாளர்களை விரட்டுவதற்கான துணிச்சலை வீரமங்கை வழங்கட்டும்: அன்புமணி புகழாரம்
உதகை மலை ரெயில் சேவை 2-வது நாளாக ரத்து
மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
