வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமனம்
கராகஸ் - தென்அமெரிக்காவில் உள்ள நாடு வெனிசுலா. அந்த நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பகை நிலவி வருகிறது. வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாகவும், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க அதிபர் டிரம்ப் வற்புறுத்தி வந்தார். போதைப்பொருள் கடத்த வெனிசுலா உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து அமெரிக்கா நேரடி நடவடிக்கையில் ஈடுபட தொடங்கியது. போதைப்பொருள் கடத்துவதாக சந்தேகத்தின்பேரில், கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் கடல் பகுதிகளில் செல்லும் படகுகள் மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதுவரை 35 படகு தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. 115 பேர் பலியாகி உள்ளனர். தன்னை ஆட்சியில் இருந்து அகற்ற அமெரிக்கா திட்டமிடுவதாகவும், எண்ணெய் வளத்தை கைப்பற்ற முயற்சிப்பதாகவும் வெனிசுலா அதிபர் குற்றம்சாட்டி வந்தார். விரைவில், வெனிசுலா மீது தாக்குதல் நடத்த உத்தரவிடுவேன் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.இந்நிலையில், நேற்று அதிகாலையில், வெனிசுலா மீது அமெரிக்கா சரமாரியாக தாக்குதல் நடத்தியது. தலைநகர் கராகஸ் நகரில் அமெரிக்க போர் விமானங்கள் தாழ்வாக பறந்து சென்று குண்டுகளை வீசின. இதனால் வெனிசுலாவில் போர் பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே, புளோரிடாவில் உள்ள தனது கிளப்பில் கடந்த 2 வாரங்களாக முகாமிட்டுள்ள டிரம்ப், அங்கிருந்தபடி தனது சமூக வலைத்தள பக்கத்தில், வெனிசுலா தாக்குதல் செய்தியை பதிவிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-அமெரிக்க சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து வெனிசுலா மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. வெனிசுலா அதிபர் மதுரோவும், அவருடைய மனைவியும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நாடு கடத்தப்பட்டனர். மீதி விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்” என்று கூறியிருந்தார். வெனிசுலா நாட்டை அமெரிக்காவே தற்காலிகமாக நிர்வகிக்கும் என்றும் டிரம்ப் கூறியிருந்த நிலையில், வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வெனிசுலாவின் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வெனிசுலாவில் எண்னெய், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளை டெல்சி ரோட்ரிக்ஸ் கவனித்து வந்தார்.




மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? - தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் விளக்கம்
தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது: செல்வப்பெருந்தகை
அநீதி ஆட்சியாளர்களை விரட்டுவதற்கான துணிச்சலை வீரமங்கை வழங்கட்டும்: அன்புமணி புகழாரம்
உதகை மலை ரெயில் சேவை 2-வது நாளாக ரத்து
மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
