உலக ரேபிட் செஸ்: இந்தியாவுக்கு 2 பதக்கம்..குகேஷ், பிரக்ஞானந்தா ஏமாற்றம்
தோகா, உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் தொடர் கத்தார் தலைநகர் தோகாவில் நடந்தது. இதில் முதலில் ரேபிட் வடிவிலான போட்டி 3 நாட்கள் நடந்தது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.13 சுற்றுகளை கொண்ட ஓபன் பிரிவில், நார்வே வீரர் கார்ல்சென் (9 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வி) முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார்.ரஷிய வீரர் விளாடிஸ்லாவ் 2-வது இடம் பிடித்தார்.இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 9.5 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர்களான குகேஷ் 8.5 புள்ளிகளுடன் 20-வது இடத்துக்கும், பிரக்ஞானந்தா 8.5 புள்ளிகளுடன் 28-வது இடத்தையும் பிடித்து ஏமாற்றம் அளித்தனர்.11 சுற்றுகளை கொண்ட பெண்கள் பிரிவில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரா கோர்யாச்கினா முதல் முறையாக தங்கம் வென்றார். சீன வீராங்கனை ஜூ ஜினெர் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பி 8.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.பதக்கம் வென்ற எரிகைசி, கோனெரு ஹம்பி இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.ரேபிட் போட்டி முடிந்த நிலையில் உலக பிளிட்ஸ் செஸ் போட்டி இன்றும், நாளையும் அதே இடத்தில் நடக்கிறது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது: காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தகவல்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் கைது
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
