நடப்பாண்டை வெற்றியோடு நிறைவு செய்த இந்திய கிரிக்கெட் அணி.. அடுத்த போட்டி எப்போது..?
சென்னை, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு (நவம்பர் 14 முதல் டிசம்பர் 19-ம் தேதி வரை) 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இருந்தது. இதனையடுத்து நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றி 2025-ம் ஆண்டை வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது. இந்த சூழலில் இந்திய அணிக்கு அடுத்த போட்டி எப்போது? யாருடன்? எந்த கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதற்கான பதிலை இங்கு காணலாம்..! நியூசிலாந்து கிரிக்கெட் அணி வரும் ஜனவரி மாதம் (2026) இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் ஆட உள்ளது. இதில் இவ்விரு அணிகள் இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி, இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 11-ம் தேதி வதோதராவில் நடைபெற உள்ளது. இதுவே இந்திய அணி அடுத்து விளையாட உள்ள போட்டியாகும்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
