உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன்; இந்திய இணைக்கு வெண்கல பதக்கம்
ஹாங்சவ், சீனாவின் ஹாங்சவ் நகரில் நடந்த உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் அரையிறுதி போட்டியில் இந்தியாவை சேர்ந்த சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை விளையாடினர். இதில், சீன வீரர்களான லியாங் வெய் கெங் மற்றும் வாங் சாங் இணை 21-10, 17-21, 15-21 என்ற புள்ளி கணக்கில் இந்திய இணையை வெற்றி கொண்டனர். இந்த ஆண்டின் கடைசி பேட்மிண்டன் தொடரான இதில், முதல் செட்டை எளிதில் இந்திய இணை வசப்படுத்தியது. எனினும், அடுத்த செட்டில் உஷாராக விளையாடிய சீன இணை வெற்றி பெற்று, அடுத்த செட்டை நோக்கி போட்டியை நகர்த்தியது. இந்நிலையில், 3-வது செட்டிலும் திறமையாக விளையாடி அதனை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதனால், இந்தியா வெண்கல பதக்கத்துடன் திருப்தியடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டி தொடரில் இந்திய வீரர்கள் வென்ற 2-வது பதக்கம் ஆகும். இதற்கு முன் 2018-ம் ஆண்டில் நடந்த பெண்கள் ஒற்றையர் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தங்க பதக்கம் வென்றார். உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டி தொடரில் தங்கம் வென்ற நாட்டின் ஒரே இந்திய வீராங்கனை என்ற பெருமையை சிந்து பெற்றுள்ளார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
