ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த சுப்ரீம்கோர்ட்டு
புதுடெல்லி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் பல கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதால் வழக்கை சி.பி.ஐ. (மத்திய புலனாய்வு அமைப்பு) விசாரணைக்கு மாற்றக்கோரி, ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் இம்மானுவேல் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்ததார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி கடந்த மாதம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி.அஞ்சாரியா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 28 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, இரண்டு பேருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், முழு விசாரணை நடத்தி 7,400 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது சரியானது அல்ல என்று தமிழ்நாடு அரசு தனது வாதத்தை முன்வைத்தது. இதனை கேட்ட நீதிபதிகள், அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் மாற்ற வேண்டும் என்று கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக எதிர்மனுதாரர் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா
