'தி.மு.க.,வை மக்கள் நம்ப தயாராக இல்லை'

தினமலர்  தினமலர்
தி.மு.க.,வை மக்கள் நம்ப தயாராக இல்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை:'தி.மு.க.,வின் போலி வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும் தான் என்பதை, மக்கள் உணர்ந்துள்ளனர்; இனியும் தி.மு.க.,வின் நாடகங்களை மக்கள் நம்பத் தயாராக இல்லை' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:


கடந்த, 2021 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., கொடுத்த, 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக மேடைக்கு மேடை பொய் கூறிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

அதே தேர்தல் வாக்குறுதிகளை, அப்படியே மறுபடியும் வரும் லோக்சபா தேர்தலுக்கும் கொடுப்பதில் இருந்தே, எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது தெரிகிறது.

தி.மு.க., சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளில், சமையல் காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று பொய் கூறி ஏமாற்றிவிட்டு, ஆட்சிக்கு வந்து, மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது.

அதுகுறித்து, எதுவுமே பேசாமல் இருந்துவிட்டு, தற்போது, லோக்சபா தேர்தலுக்கும் அதே பொய் வாக்குறுதியை கொடுக்க, வெட்கமாக இல்லையா?

இதுபோக, 100 நாள் வேலை திட்டம், 150 நாளாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியும் அப்படியே, மீண்டும் இந்த தேர்தலுக்கும் கொடுத்திருக்கிறது தி.மு.க.,

இனியும் தி.மு.க.,வின் நாடகங்களை மக்கள் நம்பத் தயாராக இல்லை.

இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

சென்னை:'தி.மு.க.,வின் போலி வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும் தான் என்பதை, மக்கள் உணர்ந்துள்ளனர்; இனியும் தி.மு.க.,வின் நாடகங்களை மக்கள் நம்பத் தயாராக இல்லை' என, தமிழக பா.ஜ.,

மூலக்கதை