தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியான காற்றாலைகள்
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் காற்றாலை இறக்கைகளை கையாளுவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. காற்றாலை இறக்கைகளை கையாளுவதற்கு வசதியான எந்திரங்கள், இடவசதி உள்ளதால் ஆண்டுதோறும் வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து காற்றாலை இறக்கைகள் கையாளுவது அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டுவரை 1,099 இறக்கைகள் கையாளப்பட்டன. இந்தாண்டு இதுவரை 1,158 காற்றாலைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இது 5 சதவீதம் அதிகமாகும். இந்தநிலையில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் இருந்து ஒரே கப்பலில் 101 காற்றாலை இறக்கைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. சுமார் 59.18 மீட்டர் நீளம் கொண்ட காற்றாலை இறக்கைகள் எம்.வி. பி.பி.சி சந்தியாகு என்ற கப்பல் மூலம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதற்கு முன்பு ஒரே கப்பலில் 75 இறக்கைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடக்கத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
