புதிய 'வந்தே பாரத்' ரயில் தமிழகத்தில் இயக்கப்படுமா?

தினமலர்  தினமலர்
புதிய வந்தே பாரத் ரயில் தமிழகத்தில் இயக்கப்படுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை : சென்னையில் தயாராகியுள்ள புதிய 'வந்தே பாரத் ரயில்' தமிழகத்தில் இயக்கப்படுமா என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னை பெரம்பூர், ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான ஐ.சி.எப்.,பில் முதன்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில், 97 கோடி ரூபாயில் அதிநவீன விரைவு ரயில் தயாரிக்கப்பட்டது. மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் செல்லும் இந்த அதிவேக ரயிலுக்கு, 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

புதுடில்லி - வாரணாசி, புதுடில்லி - வைஷ்ணவ தேவி இடையே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய வந்தே பாரத் ரயில் பணிகள் முடிந்துள்ளதால், விரைவில் சென்னையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. சென்னையில் தயாரிக்கப்படும் இந்த வகை ரயில், தமிழகத்தின் முக்கிய வழித்தடத்தில் இயக்கப்பட வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பயணியர் சிலர் கூறியதாவது:

வந்தே பாரத் ரயில் வகையில், தற்போது 3வது ரயில் தயாரிக்கப்பட்டு, சோதனை ஓட்டத்திற்கு தயாராக இருக்கிறது. இந்த ரயிலை, தமிழகத்தில் ஏதாவது ஒரு முக்கியமான வழித்தடத்தில் இயக்க, ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக, பயணியர் தேவை அதிகமாக இருக்கும் சென்னை - திருநெல்வேலி அல்லது சென்னை - கோவை போன்ற தடத்தில், வந்தே பாரத் ரயில் சேவை துவங்கினால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 'ஆம்னி' பஸ் கட்டண கொள்ளையில் இருந்து பயணியர் தப்பித்து, ரயிலில் ஓரளவுக்கு நிம்மதியான பயணத்தை மேற்கொள்ள முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

மக்கள் பாதுகாப்பாகவும், விரைவாகவும் செல்ல, வந்தே பாரத் போன்ற அதிவேக ரயில்களை தயாரிப்பதில், ரயில்வே ஆர்வம் காட்டி வருகிறது. நாட்டின் பெரும்பாலான ரயில் பாதையில், அதிகபட்சமாக மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும். தென் மாவட்டங்களுக்கான ரயில் பாதையில், மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும். ஆனால், 110 கிலோ மீட்டர் வேகத்தில் தான் ரயில் இயக்கப்படுகிறது. வந்தே பாரத் ரயில் இயக்க, ரயில் பாதையின் தரம் முக்கியமானது.

புதிய வந்தே பாரத் ரயில், விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த ரயில், தமிழகத்தில் இயக்குவது குறித்து, ரயில்வே வாரியம் தான் முடிவு செய்ய வேண்டும்.ஆனால், சென்னை - பெங்களூரு, சென்னை - திருப்பதி தடத்தில் இந்த ரயில் இயக்கும் வகையில், ரயில் பாதைகள் தயாராக இருக்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


சென்னை : சென்னையில் தயாராகியுள்ள புதிய 'வந்தே பாரத் ரயில்' தமிழகத்தில் இயக்கப்படுமா என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சென்னை பெரம்பூர், ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை