சென்னை வங்கிக் கொள்ளையன் முருகன் கைது!

தினமலர்  தினமலர்
சென்னை வங்கிக் கொள்ளையன் முருகன் கைது!

சென்னை : சென்னை வங்கியில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளி முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஒரே பள்ளியில் படித்த மாணவர்கள் என்பது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் பெடரல் வங்கியின் தங்க நகைக் கடன் பிரிவான 'பெட் பாங்க்' என்ற கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆக.,13ம் தேதி பட்டபகலில் மர்ம நபர்கள் நுழைந்தனர்.பணியில் இருந்த காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஊழியர்களை கட்டிப் போட்டு 20 கோடி ரூபாய் மதிப்பிலான 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றனர்.

வங்கியின் கிளை மேலாளர் சுரேஷ் அளித்த புகாரின்படி அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அன்பு தலைமையில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமானது.
விசாரணையில் இதே வங்கியில் மண்டல மேலாளராக பணிபுரிந்து வில்லிவாக்கம் கிளை மண்டல மேலாளராக தற்போது பணியாற்றும் பாடியைச் சேர்ந்த முருகன் 37, தன் கூட்டாளிகளுடன் 10 நாட்களாக திட்டமிட்டு கொள்ளையடித்தது தெரிய வந்தது.

கொள்ளை நடந்த 24 மணி நேரத்திற்குள் முருகன் மற்றும் கூட்டாளிகளான வில்லிவாக்கத்தை சேர்ந்த சந்தோஷ் 30, பாலாஜி 28, செந்தில் 30, ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 8.5 கோடி ரூபாய் மதிப்பிலான 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இரண்டு கார்கள் ஒரு இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று காட்சிப்படுத்த பட்டன. இதனால் அந்த இடமே நகைக் கடை போல காட்சி அளித்தது.நகைகளை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பார்வையிட்டார். தனியார் வங்கி அதிகாரிகளை வரவழைத்து நகைக்குரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.
பின் கமிஷனர் சங்கர் ஜிவால் அளித்த பேட்டி:


கொள்ளை நடந்த 20 நிமிடத்தில் வாடிக்கையாளர் வாயிலாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் வங்கியில் பணிபுரிந்த முருகன் என்பவரே கூட்டாளிகள் மூன்று பேருடன் கொள்ளையடித்தது தெரியவந்தது.கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முருகனை அடையாளம் கண்டதால் அவரது நடவடிக்கை குறித்து தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர்.அதேசமயம் கொள்ளையர்கள் தப்பி சென்ற பகுதிகளில் உள்ள 'சிசிடிவி கேமரா'க்களையும் ஆய்வு செய்தனர்; அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

கொள்ளை நடந்த 24 மணி நேரத்தில் முருகனின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளையும் வங்கி அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பதால் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற பத்து நாட்களாக ஆலோசித்து சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.
மேலும் ஏழு பேர் கொள்ளைக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளது. அவர்கள் பதுங்கி இருக்கும் இடம் தெரிந்து விட்டது; விரைவில் கைது செய்து விடுவோம்.சம்பவத்தில ஈடுபட்ட குற்றவாளிகள் மதுரவாயல், பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் சுற்றினர்.

கொள்ளையடித்த நகைகளை இரு பங்காக பிரித்துள்ளனர். மீதமுள்ள நகைகள் முருகனிடம் இருக்கும் என தெரிகிறது.கூட்டாளிகளுடன் முருகன் வங்கிக்கு கொள்ளையடிக்க வரும்போது வாசலில் நின்ற காவலாளிக்கு மயக்க குளிர்பானம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் மயக்கம் அடையவில்லை. குளிபானத்தை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். சம்பவத்தின்போது வங்கியில் உள்ள அலாரம் ஒலிக்காதது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. வங்கியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ரிசர்வ் வங்கி தான் மாதம்தோறும் ஆய்வு செய்ய வேண்டும்.


கொள்ளையர்களை பிடிக்கும் போலீசாருக்கு ஒரு லட்சம் பரிசை டி.ஜி.பி. அறிவித்துள்ளார். அத்தொகையை ஐந்து லட்சமாக உயர்த்தி வழங்க கேட்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.முக்கிய குற்றவாளி முருகனை போலீசார் கொரட்டூர் பகுதியில் கைது செய்துள்ளதாக தெரிகிறது. எனினும் அதிகாரபூர்வமாக போலீசார் அறிவிக்கவில்லை. மீதமுள்ள நகைகளை மீட்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை : சென்னை வங்கியில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளி முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை