இது உங்கள் இடம்: கரிகாலன் போல பெயரெடுப்பீர்கள்!

தினமலர்  தினமலர்
இது உங்கள் இடம்: கரிகாலன் போல பெயரெடுப்பீர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்


அ.அப்பர் சுந்தரம், மயிலாடுதுறையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறக்கப்பட்டுள்ள பல ஆயிரம் கன அடி தண்ணீரில் பெரும் பகுதி, தற்போது வீணாக கடலில் கலக்கிறது. இப்படி வீணாகும் தண்ணீரை சேமிக்க வழியே இல்லையா என, தமிழக கிராமங்களில் உள்ள அனைத்து மக்களாலும் பரவலாக பேசப்படுகிறது.

கடந்த காலங்களில் காவிரியில் தண்ணீர் பெற, விவசாயிகளும், பொதுமக்களும் எத்தனை போராட்டங்களை நடத்தினர் என்பதை நாடே அறியும். அது மட்டுமின்றி, காவிரி தண்ணீர் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக, இன்றும் கர்நாடக மாநிலத்திற்கு எதிரான தமிழக அரசின் சட்டப் போராட்டங்கள் தொடர்கின்றன. அதே நேரத்தில், இயற்கையின் கருணையால் ஆண்டுதோறும் காவிரியில் கிடைக்கும் அளவற்ற தண்ணீரை சேமிக்கின்ற திட்டங்களை இன்னும் தீட்டாமல், தமிழக அரசு மெத்தனமாக இருப்பது வேதனை அளிக்கிறது.



காவிரியில் அளவுக்கு அதிகமான தண்ணீர் செல்லும் அதே நேரத்தில், பல உள்மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் தண்ணீரின்றி வறட்சியாக இருப்பதை, ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது. இந்த இரண்டு நிலவரங்களையும், தமிழக அரசு பார்த்தும், பார்க்காதது போல இருப்பது ஏற்புடையதல்ல. எனவே, ஒவ்வொரு ஆண்டும் காவிரியில் உபரி நீராக கர்நாடகத்தில் இருந்து வரும் தண்ணீர், கடலில் கலக்காமல் சேமிக்கின்ற முழு முயற்சியை, தொலைநோக்கு பார்வையுடன் தமிழக அரசின் நீர் மேலாண்மை துறை அமைச்சர் துரைமுருகன் உடனடியாக எடுக்க வேண்டும்.


இல்லையெனில், ௧௦௦ ஆண்டுகள் ஆனாலும், தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை தீர்க்க முடியாத நிலைமை உருவாகி விடும். முதல்வர் ஸ்டாலினும் இந்த விஷயம் குறித்து உடனே ஆராய்ந்து, தண்ணீரை சேமிப்பதற்கான திட்டங்களை தீட்டிச் செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.

அதுவே, மக்களின் எதிர்பார்ப்பு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், கரிகால் சோழன் கட்டிய கல்லணை இன்றும், அவரின் பெருமையை பறைசாற்றுகிறது. அதேபோல, காவிரி நீர் வீணாகாமல் தடுக்க, சிறப்பான நீர் மேலாண்மை திட்டங்களை, தி.மு.க., அரசு செயல்படுத்தினால், எதிர்கால வரலாறு ஸ்டாலின் பெயர் சொல்லும் என்பதை நினைவில் கொள்ளவும்.

உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்அ.அப்பர் சுந்தரம், மயிலாடுதுறையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மேட்டூர் அணையிலிருந்து காவிரியில்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை