355 ஊராட்சிகளில் சுகாதார பணிகளுக்கு முக்கியத்துவம்! ரூ.12 கோடியில் 1,159 பணிகள்

தினமலர்  தினமலர்
355 ஊராட்சிகளில் சுகாதார பணிகளுக்கு முக்கியத்துவம்! ரூ.12 கோடியில் 1,159 பணிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

செங்கல்பட்டு,-செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிகளில், சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக, மத்திய அரசு நிதியின் கீழ் 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1,159 பணிகள் நடந்து வருகின்றன.





செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.இந்த ஊராட்சிகளில், மத்திய அரசின் 15வது நிதி குழு மானியத்தில், கிராம ஊராட்சியில் வரையறுக்கப்பட்ட 60 சதவீதம் நிதியிலிருந்து, சுகாதார பணிகளும், 30 சதவீதம் நிதியில் சாம்பல் நீர் மேலாண்மை பணிகளும் செயல்படுத்தப்பட உள்ளன.

அனைத்து ஊராட்சிகளையும் துாய்மைாக மாற்ற, இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த திட்டத்தில், ஊராட்சிகளில் கழிவு நீர் கால்வாய், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சேமிக்க தனி நபர் உறிஞ்சி குழி அமைக்கப்படுகிறது.மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி, மினி டேங்குகளில் இருந்து வெளியேறும் தண்ணீரை சேமிக்க, சமுதாய உறிஞ்சி குழிகள் அமைக்கப்படுகின்றன.


'இ - காட்' வாகனம்



ஊராட்சிகளில், வீடுகளில் இருந்து சேகரமாகும்குப்பையை வாங்க, புதிதாக மூன்று சக்கர மிதிவண்டி, தள்ளுவண்டி, பேட்டரியில் இயங்கக்கூடிய 'இ - காட்' வாகனம் வாங்கப்பட உள்ளன.வீடுகளிலிருந்து சேகரமாகும் குப்பையை மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரிக்க, கூடம் அமைத்தல், பழுதுபார்த்தல், உரக்குழிகள், மண்புழு உரம் தயாரிக்கும் கூடம் அமைப்பது உள்ளிட்ட பல பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன.இத்திட்ட பணிகளை செயல்படுத்த, இந்த ஆண்டு, 12.06 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு,-செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிகளில், சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக, மத்திய அரசு நிதியின் கீழ் 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1,159 பணிகள் நடந்து வருகின்றன.nsimg3039932nsimg

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை