'ஏட்டையா உனக்கு இது தேவையா' : முட்டை திருடிய ஏட்டு சஸ்பெண்ட்

தினமலர்  தினமலர்
ஏட்டையா உனக்கு இது தேவையா : முட்டை திருடிய ஏட்டு சஸ்பெண்ட்

சண்டிகர்: பஞ்சாபில் சாலையோரம் நின்றிருந்த டிரைசைக்கிளில் முட்டைகளை திருடிய போலீஸ்காரர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பஞ்சாப் மாநிலம் சண்டிகர் அருகே பதேகார்க் என்ற நகரில் சாலையோரம் டிரைசைக்கிளில் வைக்கப்பட்டிருந்த முட்டைகளை அங்கு நின்றிருந்த தலைமை காவலர் ஒருவர் வாகனங்களை ஒழுங்குப்படுத்துவது போல் நடித்து, டிரைசைக்கிள் அருகே சென்று நைசாக முட்டைகளை திருடி தனது பேண்ட் பாக்கெட்டில் திணித்தார்.


இதனை தொலைவில் யாரோ ஒருவர் தனது மொபைலில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றினார். அந்த வீடியோ வைரலாக பரவியது. போலீசார் நடத்திய விசாரணையில், முட்டைகளை திருடிய தலைமை காவலர் ப்ரித்பால்சிங் என்பது தெரியவந்தது. அவர் மீது துறைரீதியான விசாரணை நடத்திய உயரதிகாரி ஏட்டு ப்ரித்பால்சிங்கை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

மூலக்கதை