அசாம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஹிமந்தா பஸ்வா இன்று தேர்வு

தினகரன்  தினகரன்
அசாம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஹிமந்தா பஸ்வா இன்று தேர்வு

அசாம்: அசாம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஹிமந்தா பஸ்வா இன்று தேர்வு செய்யப்பட உள்ளார். சமீபத்தில் தமிழ்நாடு, அசாம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், 126 தொகுதிகளை உள்ளடக்கிய அசாம் மாநிலத்தில் தேர்தலில் 75 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. இதில், 60 தொகுதிகளில் தனித்து வெற்றி பெற்ற பாஜக முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலே தேர்தலை எதிர்கொண்டது. இதனால், முதலமைச்சர் யார் என்பது குறித்த விவாதம் எழுந்தது. முதலமைச்சர் பதவிக்கு போட்டியாளர்களாக முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனோவால் மற்றும் முன்னாள் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இருந்தனர். இதைத் தொடர்ந்து, பாஜக தலைமை இருவரையும் அழைத்து நேற்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இல்லத்தில் நடைபெற்றது. இந்த நிலையில், அசாமின் புதிய முதலமைச்சராக ஹிமந்தா பஸ்வா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மூலக்கதை